தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் நம்ம நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்கள் அன்போடு அழைப்பதுண்டு. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றது. அது அனைவருக்குமே தெரியும். திருமணம் முடிந்து ஆறு மாதத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கும் தாயாகியுள்ளார்.
இந்தநிலையில், நயன் சினிமாவில் இருந்து விலக போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தனது இரட்டை குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக தான் இந்த முடிவை நயன் எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே கமிட் ஆன படங்களை மட்டும் முடித்துவிட்டு, இனி தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி நயன்தாராவின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், திரை நட்சத்திரங்களுக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…