சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடித்த நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்து நிக்கி கல்ராணி விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்-நடிகையாக வலம் வந்த ஆதி-நிக்கி கல்ராணி ஜோடி காதலித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் 18 ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து ரசிகர்கள் நிக்கி கல்ராணிக்கு வாழ்த்துக்களை கூற ஆரம்பித்தனர்.
இந்நிலையில், நடிகை நிக்கி கல்ராணி இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில், "நான் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானது. கர்ப்பமாக இருந்தால் முதலில் அந்த செய்தியை வெளியிடும் நபர் நானாகத்தான் இருக்கும்." என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி முற்றிலும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…