Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிச்சைக்காரன் 2 படம் எப்படி இருக்கு | Pichaikaran 2 Review in Tamil

Priyanka Hochumin Updated:
பிச்சைக்காரன் 2 படம் எப்படி இருக்கு | Pichaikaran 2 Review in TamilRepresentative Image.

விஜய் ஆண்டனி அவர்கள் இயக்கி நடித்த திரைப்படம் "பிச்சைக்காரன்-2" திரையரங்கில் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. படம் எப்படி, என்ன மாதிரியான கதை உள்ளிட்ட பல விவரங்களை பார்க்கலாம்.

ரிலீஸ் தேதி - 19/05/2023

பட்ஜெட் - 30 கோடி

படக்குழு - விஜய் ஆண்டனி, காவ்யா தாபர், ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், தேவ் கில், ஹரீஷ் பேரடி.

பிச்சைக்காரன் முதல் பாகம்

திருப்பூர் மாவட்டத்தின் மிகப்பெரிய தொழிலதிபர் அருள் செல்வகுமார் (விஜய் ஆண்டனி). வெளிநாட்டில் இருந்து தன்னுடைய படிப்பை முடித்து விட்டு தன்னுடைய தாய் புவனேஸ்வரிக்கு துணையாக இருக்க திரும்ப வருகிறார் அருள். அப்போது எதிர்பாராத விதமாக புவனேஸ்வரி விபத்தில் சிக்கி கோமாக்கு சென்று விடுகிறார். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி அவரின் மைத்துனர் அவிநாசி சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகிறார். இந்த சூழ்நிலையில் முனிவர் ஒருவர் அருளிடம் 48 நாட்கள் பிச்சை எடுத்து தன்னுடைய செலவு போக மீதமுள்ள பணத்தை கோவில் உண்டியலில் போட வேண்டும். இந்த விஷயத்தை வேற யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறினார். தன்னுடைய தாயை காப்பாற்ற இந்த கடினமான பாதையை தேர்ந்தெடுத்து இறுதியில் எல்லா கஷ்டங்களையும் தாண்டி வெற்றி பெறுவார் அருள்.

பிச்சைக்காரன் இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகத்தின் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என்று பல அவதாரங்களை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் ஆண்டனி. இந்தியாவில் உள்ள டாப் 10 பணக்காரர்களில் ஒருவர் விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி). இவரின் நம்பகமான தோழன் அரவிந்த் (தேவ் கில்) தன்னுடைய கூட்டாளிகள் இளங்கோ (ஜான் விஜய்) மற்றும் சிவாவுடன் (ஹரீஷ் பேரடி) இணைந்து விஜய் குருமூர்த்திக்கு வேறொருவரின் மூளையை மாற்று அறுவை சிகிச்சை செய்து சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். அதில் வந்து சிக்கிக்கொள்பவர் தான் சத்யா (விஜய் ஆண்டனி).

தன்னுடைய பாதி வாழ்க்கையை சிறையில் கழித்து விட்டு வெளியே வருகிறார் சத்யா. அவர் சிறு வயதில் தன்னுடைய தங்கையை தன்னிடம் இருந்து பிரித்த நபரை கண்டு பிடித்து கொலை செய்து விட்டு, எந்த தொந்தரவும் இன்றி தன்னுடைய தங்கையுடன் இறுதி காலத்தை வாழ நினைக்கிறார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக மற்றொரு கும்பலுடன் சிக்கிக்கொள்கிறார். இந்த படம் மூளை அறுவை மாற்று சிகிச்சையில் நடக்கும் மோசடிகள், அண்ணன்-தங்கை பாசம் என்று கதைகளம் நகர்கிறது. இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது. மொத்தத்தில் படம் அருமை. குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்