பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தனக்கு திரையிட்டு காண்பிக்காமல் செப்டம்பர் 30 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிடக்கூடாது என வக்கீல் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நீண்ட நாட்களாக இந்த கதையை யார் திரைப்படமாக்குவார்கள் என பலரும் ஏக்கத்துடன் பேசி வந்த பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார். இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.
படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் தற்போது திடீரென வக்கீல் ஒருவர் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடக் கூடாது என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள நோட்டீசில் பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று உண்மைகள் பலவும் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த படத்தை தனக்கு திரையிட்டு காட்டாமல் வெளியிடக்கூடாது என்றும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…