பூ படத்தில் கதாநாயகன் தங்கராசுவின் அப்பாவாக நடித்திருந்த பூ ராமு காலமானார். கடைசியாக சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் அப்பாவாக நடித்திருந்தார்.
பூ படத்தைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து நிறைய கதாபாத்திரங்கள் தேடி வந்தன. நீர்ப்பறவை, வீரம், ஜில்லா, நெடுநல்வாடை ஆகிய படங்களிலும் நடித்தார். தங்க மீன்கள் படத்தில் செல்லாமாளின் தாத்தாவாக நடித்து தன்னை திரும்பி பார்க்க வைத்திருப்பார் ராமு. மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி முதல்வராக பரியனுக்கு அறிவுரை கூறும் கதாபாத்திரமாக வருவார் ராமு.
இதையடுத்து சூரரை போற்று படத்தில் சூர்யாவின் தந்தையாக நடித்திருப்பார். அதில் அவர் இறக்கும் காட்சியும் இருக்கும்.
இப்படி தமிழ் திரைப்படங்களில் மிக சில படங்களிலே நடித்திருந்தாலும், மக்கள் எளிதில் அடையாளம் காண முடியும் அளவுக்கு புகழ் பெற்றுவிட்டார். சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ராமு. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக இயக்குநர் லெனின் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…