தனக்கு பிடிக்காததை செய்யச் சொன்ன தயாரிப்பாளரைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் ப்ரியா மணி. மேலும் அந்த சமயத்தில் தான் வேறு வழியின்றி தான் அவர் சொன்னதை செய்ததாகவும், சினிமா வாய்ப்புகளுக்காக தனக்கு பிடிக்காவிட்டாலும் தயாரிப்பாளர் சொல்வதை செய்வதுதான் ஒரே வழியாக இருந்தது என்றும் பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், சமீப காலமாக பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். பிரியாமணி தமிழில் பருத்திவீரன் உட்பட நல்ல படங்களில் நடித்திருந்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து, பின் கவர்ச்சிக்கு மாறி அப்போதும் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். ஆனால் இப்போது ஹிந்தி, வெப்சீரிஸ் என தனது சினிமா வாழ்க்கையை தகவமைத்துக் கொண்டுள்ளார்.
பிரியாமணி தற்போது ஒரு பேட்டியில் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். தயாரிப்பாளர் ஒருவர் தன்னை அணுகி, தொப்புள், மார்பு உள்ளிட்ட சில இடங்களில் டாட்டூ போட்டுக்கொள்ள கேட்டாராம். அன்றைய தினம் சினிமா வாய்ப்புக்காக செய்ததாகவும், ஆனால் அதில் தனக்கு துளி கூட விருப்பமில்லை எனவும் மனம் திறந்துள்ளார் பிரியா மணி. தெலுங்கு படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக பிரியாமணி, தற்காலிக டாட்டூ போட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…