ரோஜா மலர்களின் ஆளுமை ஆணும் பெண்ணும் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு இங்கு கவிஞர்கள் ரோஜாவை கொண்டாடி வருகின்றனர். காதல் என்றால் ரோஜா, பெண் என்றால் ரோஜா என அனைத்தையும் காதலோடு ரோஜாவை ஒப்பீடு செய்து கவிதையாக வடித்துள்ளனர்.
சிற்பி இசையில் பழனிபாரதி எழுதிய பாடல் வரிகளை இங்கு காண்போம். கோகுலம் படத்திலிருந்து புது ரோஜா.. மனோ, ஸ்வர்ணலதா குரலில் நம்மை மயங்கச் செய்யும் பாடல்.
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே ஹோய்
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே ஹோய்
பூவைப் பார்க்க வந்த தென்றல் உன்னைப் பார்த்ததே
உன்னைப் பார்த்து நின்றதாலே கன்னம் வேர்த்ததிங்கே
இது பருவ மழையின் காலம்
என் இளமை என்னவாகும்
இது பருவ மழையின் காலம்
உன் இளமை என்னவாகும்
விழி புருவங்கள் நனைந்திட
ஆசைகள் கனிந்திட நாணம் பூத்ததோ
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே ஹோய்
அன்பே உந்தன் கூந்தல் ஓரம் ஏங்கும் ராத்திரி
துள்ளும் மின்னல் கண்களாலே தீபம் ஏற்ற வா நீ
இனி வானம் பூமி ஆகும்
இந்த பூமி வானம் ஆகும்
இனி வானம் பூமி ஆகும்
இந்த பூமி வானம் ஆகும்
இனி தனிமைகள் விடை பெரும்
தலையணை சுகம் தரும்
காலம் வந்ததோ
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே ஹோய்
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே ஹோய்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…