தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் கலக்கி வரும் நடிகை ரெஜினா கெசண்ட்ரா. இவரது முதல் தமிழ் படம் கண்ட நாள் முதல். இந்த படத்தைத் தொடர்ந்து அழகிய அசுரா படத்திலும் நடித்தார் ரெஜினா. ஆனால் தமிழகம் இவரை அடையாளம் கண்டு கொண்டது சிவகார்த்திகேயன் படத்தில்தான்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இரண்டு கதாநாயகிகளில் ஒருவர்தான் என்றாலும் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் தான். ஆனால் இந்த படத்தைத் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தெலுங்கு பக்கம் போனவர் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் துவங்கினார். இடையில் தமிழில் ராஜதந்திரம் படத்தில் நடித்திருந்தார்.
2017ம் ஆண்டு லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் எண்ட்ரி ஆனார். சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, சிலுக்குவார்பட்டி சிங்கம், பார்ட்டி என அடுத்தடுத்து தமிழில் சில படங்களில் தோன்றினார்
நெஞ்சம் மறப்பதில்லை, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு தமிழில் இன்னும் ரிலீஸ் ஆகாமல் பல படங்கள் காத்திருக்கின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…