கவிஞர் வைரமுத்துவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டும் மேலும் அவர் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும் கோவையில் வைத்து நாளை "வைரமுத்து இலக்கியம் 50" என கோவை கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக கோவையில் தங்கியுள்ள வைரமுத்து ராம்நகர் பகுதியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்த 50 ஆண்டுகாலத்தில் நான் செய்தது எதுவும் சாதனைகள் கிடையாது, நான் பெற்ற விருதுகள் ஏதும் சாதனைகள் ஆகிவிட முடியாது என கூறினார். மேலும் இனிமேல் தான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன ஊட்ட கருத்துக்கள் சொல்ல வேண்டும்? புத்தம் புதிய படைப்புகள் என்ன படைக்க வேண்டும்? இருக்கின்ற இடைவெளியை எப்படி நிரப்ப வேண்டும்? என்று சிந்திக்க கூடிய வயதில் நான் இருக்கிறேன் எனக் கூறினார்.
மேலும் மீண்டும் பல நல்ல படைப்புகளுடன் தமிழ் மக்களை சந்திப்பேன் என கூறிய அவர், கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்க பல இயக்குனர்கள் என்னை அணுகினார்கள், ஆனால் அதில் எனக்கு அப்போது தயக்கம் இருந்தது என கூறியுள்ளார். மேலும் நாவலை படமாக்கும்போது இரண்டுவித விளைவுகள் உருவாகும் ஒன்று நாவலை விட மிக சிறப்பாக படமாக்குவது, அடுத்து நாவலை விட குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக படமாக்குவது என கூறினார்.
மேலும் கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்கும் பொழுது நடிகர் ரஜினிகாந்தை கதாநாயகராக ஆக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்ததாக தெரிவித்த அவர் ரஜினி இதனை ஏற்று நடித்தால் அவர் நினைத்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் எதிர்பாராத விருதுகள் கிடைக்கும் என கூறியுள்ளார்.
மேலும் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கேட்ட போது, நான் இந்த கேள்வியில் இருந்து தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளேன் என அவரது பாணியில் பதில் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…