வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல வெற்றிகளை கொடுத்தவர் ராதிகா சரத்குமார். ராடான் டிவி' என்கிற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சன் டிவியுடன் இணைந்து சித்தி, வாணி ராணி, செல்லமே என பல மெகா ஹிட் சீரியல்களை கொடுத்தார்.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியிலிருந்து வெளியேறி, கலர்ஸ் தமிழ் சேனலுக்கு சென்றிருந்தார். ஆனால் கலர்ஸ் தமிழ் சேனலில் பெரும்பாலான சீரியல்கள் முடிவுக்கு வந்தநிலையில், தற்போது இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி என்ற சீரியலில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராதிகாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் இளைய தளபதி விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கவுள்ளாராம்.
'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் கதையின் சீரியல் வெர்ஷனா 'கிழக்கு வாசல்' -என்ற ஒரு கதையை டிக் செய்திருக்கறதாக சொல்லப்படுகிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலிருந்து அந்தப் புதிய சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த சீரியலின் ப்ரோமோ விரைவில் விஜய் டிவியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…