விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில், தமிழ் மீது வீண் பழி போட்டு அவரை குடும்பத்தில் மாட்டி விடும் அர்ஜூன். இதனால், சேர்மன் பதவி யாருக்குக் கிடைக்கும். வீட்டை விட்டு தமிழ், சரஸ்வதி வெளியே சென்று விடுவார்களா..? அர்ஜூனின் பிளேன் நடந்து விடுமா..? அடுத்தடுத்த சுவாரஸ்யங்களைப் பற்றி இதில் காணலாம்.
தமிழும் சரஸ்வதியும் சீரியலில், கோதைக்கு சந்திரகலா தான் எதிரியாக இருக்கிறார் என்று நினைத்த நேரத்தில், புதிதாக குடும்பத்தையே அழிக்கும் எண்ணத்துடன் ராகினியை கல்யாணம் செய்து வீட்டிற்குள் நுழைகின்றனர் அர்ஜூன் மற்றும் அவரது குடும்பத்தினர். இதில், அர்ஜூன் தனது குடும்பத்தை ஏமாற்றிய கோதை குடும்பத்தை நடுரோட்டுக்கு கொண்டு வர பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்.
அர்ஜூன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரது எண்ணங்கள் மற்றும் செயல்களின் மீது தமிழுக்கும், சரஸ்வதிக்கும் சந்தேகங்கள் எழுந்தது. இதனால், அவர்கள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றுவதற்குத் திட்டம் வகுத்தனர். இதனால், ராகினியின் மருத்துவப் படிப்புக்கான பயிற்சிக்கு வேறு இடத்திற்கு செல்ல வைத்தால், இவர்களும் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்திற்குச் சென்று விடுவர் என்று தமிழும் பிளேன் செய்கிறார்.
இந்நிலையில், கோதை நிறுவனத்தில் புதிய சிஇஓ-வாக நியமனம் செய்வதற்கு, தமிழ், கார்த்திக் மற்றும் அர்ஜூன் மூவருக்கும் டாஸ்க் வைத்துள்ளார். இதில், அர்ஜூன் வெற்றியடைவதற்கு மட்டுமல்லாமல், தமிழை எப்படி தோற்கடித்து வீட்டை விட்டு வெளியேற்றுவது என திட்டம் வகுக்கிறார். இதன் ஒரு பகுதியாகவே, ராகிணியிடம் தமிழுக்கு நாம உங்க வீட்டுல இருக்கிறதே பிடிக்கவில்லை என தமிழைப் பற்றித் தவறாகப் போட்டுக் கொடுக்கிறார்.
அது மட்டுமல்லாமல், தமிழ் அப்பா நடேசபெருமாள் வரும் சமயத்தில் தமிழ் அர்ஜூனை கொன்று விடுவேன் என பேசுகிறார். இதனை உறுதிப்படுத்தியவாறே, ராகிணியுடன் வெளியே செல்வது போல சென்று கார் பிரச்சனையில் இருப்பதாகக் கூறி காரை சரிபார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு வந்த தமிழ், அர்ஜூனைப் பார்த்து நீ பன்றது சரியில்லை எனக் கூறுகிறார். உடனே, அர்ஜூன் ராகினியிடம், தமிழ் சண்டைக்கு வந்து கொண்டே இருக்கிறார் எனக் கூறுகிறார்.
பிறகு, அர்ஜூன், தமிழ் வேறு இடத்திற்குச் சென்று சண்டை போட, அங்கு வந்த சில பேர் அர்ஜூனைக் கத்தியால் குத்தி விட்டுச் சென்றனர். பிறகு, அங்கிருந்து வெளியே வந்த அர்ஜூன் ஏன் சார் என்ன குத்துனீங்க? என ராகிணி முன்னாடி தமிழிடம் கேட்க, தமிழ் என்ன சொல்வது என புரியாமல் திணறுகிறார். அர்ஜூனின் பிளேன் என்று தெரியாமல் தமிழ் சிக்கிக் கொண்டார். இதிலிருந்து தமிழ் எவ்வாறு தப்பிப்பார்.? தமிழ் தவறு செய்யவில்லை என சரஸ்வதி நிரூபிப்பாரா? காத்திருந்து பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…