RRR படத்தின் மாபெரும் வெற்றி, ரசிகர்களை இதன் அடுத்த பாகம் எப்போது வரும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால், இது குறித்த எந்த ஒரு உத்தரவாதமும், படத்தின் இயக்குநர் ராஜமௌலி தெரிவிக்காமல் இருந்தார். ஆனால், ரசிகர்கள் விடாமல் இந்தப் படத்திற்கான அப்டேட்டைக் கேட்டுக் கொண்டே இருந்தனர்.
இந்நிலையில், சிகாகோவில் நடந்த ஒரு நிகழ்வில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்கள் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், RRR Part 2 –ஐ உறுதிபடுத்தினார். இது குறித்து, ராஜமௌலி கூறியதாவது, தனது அனைத்துப் படங்களுக்கும் தனது தந்தை தான் கதையாசிரியர், ஆர்ஆர்ஆர் 2 படத்தின் கதையை அவர் உருவாக்கி வருவதாகவும், எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…