8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். தனது படத்துக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மீதான மரியாதை கூடியிருப்பதாக ரசிகர்கள் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
8 தோட்டாக்கள் படம் மூலம் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தன் பக்கம் பார்க்க வைத்தவர் ஸ்ரீகணேஷ். அந்த படத்தில் பணியாற்றிய அனைவருமே புதுமுகமாக இருந்தாலும், குறைந்த பட்ஜெட்டில் அப்படி ஒரு கதையை இயக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ரசிகர்களும் அவரது அடுத்த படம் எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நல்லதொரு ஸ்கிரிப்டுடன் வந்தார் ஸ்ரீகணேஷ். இந்த முறை கதையின் நாயகனாக அதர்வா, நாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்க, அவர்களுடன் ராதிகா சரத்குமார் இணைந்து நடித்துள்ளார்.
ராக்போர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா.
அதர்வா நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் தோல்விக்கு பிறகு இந்த படம் ரிலீசானது. ஆனால் வரவேற்பு குறைவாகவே இருந்தது. படத்தின் கதை நன்றாகவே இருந்தாலும் சில இடங்களில் சரியாக வொர்க் அவுட் ஆகவில்லை என்பதால், சுமாரான படம் எனும் விமர்சனத்தையே பெற்றது
இரண்டாவது படத்திலேயே ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார் கணேஷ். இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் ஸ்ரீகணேஷும் பகிர்ந்துள்ளார்.
அடுத்த படத்தை இன்னும் கடுமையாக உழைத்து சிறப்பாக கொடுப்பேன் எனும் உறுதிமொழியுடன், இந்த படத்தை ஓடிடியில் காண விரும்புபவர்களுக்காக அறிவிப்பையும் வெளியிட்டார். அதன்படி, செப்டம்பர் 2ம் தேதி முதல் குருதி ஆட்டம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…