நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதியும், பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30ம் தேதியும் ரிலீசாக தயாராகவுள்ளன.
இந்நிலையில், கோப்ரா பட வெளியீட்டுக்கு 1 வாரமே இருப்பதால் இப்போதிருந்தே அதற்கான புரமோசன் பணிகளில் இறங்கியுள்ளார் நடிகர் விக்ரம்.
விக்ரம் படத்துக்காக கமல்ஹாசன் செய்த பயணத்தைப் போலவே தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளது இந்த சுற்றுப்பயணம்.
காலையில் திருச்சி புனித ஜோசப் கல்லூரிக்கு வருகை தந்தார் சீயான் விக்ரம். அவரது வருகைக்காக காத்திருந்த ரசிகர்களின் மிகப்பெிய வரவேற்பைத் தொடர்ந்து அவர்களது மத்தியில் பேசினார் விக்ரம். பல விசயங்களை பகிர்ந்த விக்ரம், கோப்ரா படத்துக்காக ஒட்டுமொத்த படக்குழுவும் மிகவும் கடினமாக உழைத்திருப்பதாகவும், படத்தை வெற்றி பெற செய்ய ரசிகர்களின் பேராதரவையும் வேண்டி கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், மாலை 5 மணிக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்கள் மத்தியில் பேசவுள்ளார். இன்னும் 5 நாட்களுக்கு தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோப்ரா படத்துக்கு விளம்பரம் செய்யவுள்ளார் சீயான் விக்ரம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…