Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மயிரிழையில் தப்பித்த கார்த்திக்... கோபத்தில் அனு! நல்ல மனசு சுந்தரி!

UDHAYA KUMAR Updated:
மயிரிழையில் தப்பித்த கார்த்திக்... கோபத்தில் அனு! நல்ல மனசு சுந்தரி!Representative Image.

கோபத்தில் கொந்தளித்த அனு மீது மொத்த குடும்பமும் கோபத்தில் இருக்க, சுந்தரி மட்டும் நிலமையைப் புரிந்துகொண்டு அமைதியாக சூழ்நிலையை சமாளிக்கிறாள். இது குறித்து வேறு எதுவும் பேசக்கூடாது என சத்தியமும் வாங்கிக் கொள்கிறாள். 

இரண்டு மனைவிகளைக் கட்டிக் கொண்டு கார்த்திக் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்கு சுந்தரியை விட அனுவே முக்கியம். ஆனால் குடும்பம் மொத்தமும் சுந்தரிக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்க வேறு வழியில்லாமல் அவனும் நடிக்கிறான். ஆனால் எந்த விசயமும் தெரியாத அனு, மொத்த குடும்பத்தின் மீதும் கோபம் கொள்கிறாள். 

சுந்தரியின் மாமா முருகன் கொலை வழக்கில் சிறையில் இருக்க, செய்யாத குற்றத்துக்காக அவர் இப்படி தண்டனை அனுபவிக்கிறாரே என மொத்த குடும்பமும் வருத்தத்தில் இருக்கிறது. அதனை அறிந்துகொண்ட சுந்தரி அவரை எப்படியாவது காப்பாற்ற முயற்சிக்கிறாள். சாட்சியமான மொபைல் ஃபோன் கிடைத்ததும் அதனை கிருஷ்ணாவிடம் கொடுக்கிறாள் சுந்தரி. 

கிருஷ்ணா இதனை கோர்ட்டில் ஒப்படைக்க வரும் வழியில் காரில் இருந்து மிஸ் ஆக, சாட்சியமில்லாமல் தவிக்கும் சுந்தரி எப்படியோ உண்மையை நீதிபதிக்கு உணர்த்தி வழக்கை முடிக்க உதவுகிறாள். தனது மொபைலில் ஏற்கனவே அனுப்பி வைத்திருந்த அந்த காட்சியை நீதிபதிக்கு காட்ட, உண்மை புரிந்து நீதிபதி முருகனை விடுதலை செய்கிறார். 

முருகனும் சுந்தரியும் சந்தோஷமாக வெளியே வர, திடீரென சுந்தரிக்கு மயக்கம் வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள் சுந்தரி. மொத்த குடும்பமும் மருத்துவமனையில் இருக்கிறது. இதனால் கார்த்தி, அனுவுடன் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால் அனு கார்த்தியை நச்சரிக்கிறாள்.  உள்ளே மருத்துவமனைக்குள் வந்து சண்டை போடுகிறாள். 

நிலைமை புரிந்த சுந்தரி அமைதி காக்கிறாள். ஆனால் கார்த்தியின் அம்மாவும் சுந்தரியின் மாமியாருமாகிய செல்வி கோபத்தில் எரிந்து விழ, அய்யோ உண்மையைப் போட்டு உடைத்து விடுவாரோ என சுந்தரி பயப்படுகிறாள். அங்கு முருகன் மாமா வேறு இருக்கிறார். அவருக்கு தெரிந்தால் அதோ கதிதான். நல்லவேளை முருகன் மாமா வெளியேற, அனுவை அவளது அம்மா கூட்டிச் செல்கிறாள். பின்னாடியே கார்த்தி சென்றுவிடுகிறான். திரும்பி வந்த முருகன் கார்த்தி எங்கே என கிருஷ்ணாவிடம் கேட்க அவன் ஏதோ சொல்லி சமாளிக்கிறான். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்