இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் "விருமன்" அவருக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் என கூறப்படும் இயக்குனர் சங்கரின் மகளான அதிதி நடித்துள்ளார். இவர் அறிமுகமாகும் முதல் படத்திலேயே ஒரு பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.
இந்நிலையில் அந்த பாடல் மூலம் தான் இந்த சர்ச்சை எழுந்துள்ளது, அதாவது இந்த விருமன் படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, "மதுர வீரன்" என்ற பாடலை இந்த படத்திற்காக இசையமைத்துள்ளார். இந்த பாடலை முதலில் சூப்பர்சிங்கர் புகழ் ராஜலட்சுமி தான் பாடியுள்ளார் எனவும் ஆனால் அதனை எடுத்துவிட்டு இயக்குனர் சங்கரின் மகள் என்பதால் அதிதியை பாடவைத்து அந்த பாடலை படத்திலும் இடம்பெற வைத்துள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
இதற்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில், தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்த ராஜலட்சுமி, தன்னை வைத்து தான் மதுர வீரன் பாடலை முதலில் ரெக்கார்ட் செய்தார்கள் என்றும், தற்போது அதிதி பாடியதால் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதோடு இசையமைப்பாளர்கள் பொதுவாக, பலரையும் பாட வைத்து, அந்த பாடலுக்கு யார் சரியானவர்களோ அவர்கள் குரலை தேர்வு செய்வது வழக்கமான ஒன்று தான் எனவும் தனக்கு யுவன் இசையில் பாட வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம் என்றும் கூறியுள்ளார்.
இதே போன்று "எஞ்சாயி என்ஜாமி" என்ற உலக புகழ் பெற்ற பாடலை எழுதி, இசையமைத்து, பாடிய பாடகர் திருக்குறள் அறிவு அந்த பாடல் தொடர்பான மேடைகள் அனைத்திலும் ஓரம்கட்டப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தது. அறிவும் இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பாடலின் சக பாடக தீயும், அவரது தந்தையும் இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணனும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த பிரச்சனை முடிவதற்குள் அதிதியால் ராஜலட்சுமி ஓரம்கட்டப்பட்ட சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ் சினிமாவிலும் பாலிவுட் சினிமா போல நெப்போடிசன் எழுந்துள்ளதா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…