தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படமாக பாலா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் அவர்களுக்கு இடையில் பிரச்னை எனவும் அதற்கு காரணம் வெற்றிமாறன்தான் எனவும் தகவல் பரவி வருகிறது. இதன் காரணமாக பாலா - சூர்யா படம் டிராப் ஆகியுள்ளதாகவும் செய்திகள் பரவியுள்ளது. இது உண்மையா என ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் கேட்டு வரும் நிலையில், அதுகுறித்த உண்மைத் தன்மை வெளியாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை விஜய், அஜித்துக்கு ஈடு கொடுத்து சினிமா படங்களை வெளியிட்டு வந்த சூர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகள் போறாத காலமாக ஆகிவிட்டது. அதன்பின் சுதாரித்து கொண்டு சுதாகொங்கரா படத்திலும் ஜெய் பீம் படத்திலும் நடித்து தனது திறமையை நிரூபித்தார் சூர்யா. ஆனாலும் அவை திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் அவருக்கு ஒரு பெரிய வெற்ற தேவைப்பட்டது. அதை தீர்த்து வைக்கும் என நினைத்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிட்டனர். ஆனாலும் அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. சராசரி வெற்றி பெற்று கடந்து செல்ல, சூர்யாவின் அடுத்தடுத்த படங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை பாலா இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் அதுவும் உறுதி செய்யப்பட்டு, நாகர்கோவில், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்புக்காக சென்றது படக்குழு.
இடையில் சூர்யா வாடிவாசல் படத்துக்கு தயாராகவும், காளையுடன் நெருங்கி பழகவும் நேரம் எடுத்துக் கொண்டுள்ளார். இது அந்த படத்தின் இயக்குநரான பாலாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இதுகுறித்து சூர்யாவிடம் பாலா கேட்டு வந்துள்ளார். சூர்யாவும் இது நம்ம படத்தை பாதிக்காது என வாக்குறுதி கொடுத்துள்ளார்.
பாலாவுக்கு தனது படம் மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதற்காக எந்த சூழலுக்கும் செல்ல தயாராக இருக்க வேண்டும் என்பது முக்கிய நியதி. இதனால் ரிகர்சல் செய்யவேண்டும் என கூறி பலமுறை கன்னியாகுமரி கடற்கரைகளில் ஓட விட்டாராம். முதலில் பெரிய அளவில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் நாளடைவில் சூர்யாவுக்கு இதில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிது விரிசல் ஏற்பட, பாலாவிடம் சொல்லாமலே வீடு திரும்பியுள்ளார் சூர்யா.
தற்போது வந்த தகவலின்படி, சூர்யா - பாலா படம் டிராப் ஆனதாக வந்த தகவலில் உண்மை இல்ல எனவும், அது வதந்திதான் எனவும் கூறப்படுகிறது. பிரேக் எடுக்கப்பட்டது உண்மைதான். சில வார இடைவெளிக்குப் பிறகு இந்த படம் மீண்டும் உருவாகும் என படக்குழு சம்பந்தப்பட்ட ஒருவரிடமிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், புரளிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சூர்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் உங்களுடன் பணிபுரிய ஆர்வமாய் இருக்கிறேன் என டிவிட் செய்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…