Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தமிழ் சினிமாவின் பழம்பெரும் பிரபலம் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!!

Sekar Updated:
தமிழ் சினிமாவின் பழம்பெரும் பிரபலம் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!!Representative Image.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் கதாசிரியர் மரணமடைந்த தகவல் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பரும், பழம்பெரும் கதாசிரியரும் வசனகர்த்தாவுமான பாலமுருகன் உடல்நலக் குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85.

தொடக்கத்தில் நாடகங்களுக்கு வசனங்களை எழுதி வந்த பாலமுருகனின் வசனத்தைப் பேசி தான் பல நாடகங்களில் சிவாஜி கணேசன் நடித்து பிரபலமானார். சிவாஜி கணேசன் அங்கிருந்து சினிமாவுக்கு வந்த கோலோச்ச தொடங்கிய நிலையில், அவர் மூலம் பாலமுருகனுக்கு சினிமாவுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாலமுருகன், ராஜபார்ட் ரங்கதுரை, வசந்த மாளிகை, பட்டிக்காடா பட்டினமா உள்ளிட்ட நடிகர் சிவாஜியின் பல வெற்றிப்படங்களுக்கும் வசனங்களை எழுதி உள்ளார். மேலும் பாலமுருகன் நன்கு வளர்ந்த பிறகு, நாடகங்களை சொந்தமாக எழுதி தயாரித்து அரங்கேற்றி உள்ளார்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றியிருந்த நிலையில், பாலமுருகன் நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்