சென்னை: இயக்குநர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள தலைநகரம்-2 திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தலைநகரம். இது பெரும் வரவேற்பை பெற்றது. கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்தார். இதில் இடம்பெற்ற நாய் சேகர் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் 17ஆண்டுகளுக்கு பிறகு இத்திரைப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. இதில் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் டிரைலர் வெளியாகி இருந்த நிலையில் வரும் 23ஆம் தேதி தலைநகரம்-2 திரையரங்குகளில் வெளியாகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…