Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிவகார்த்திகேயன் தொடங்கும் புதிய தொழில்?.. கடன் அவ்ளோ இருக்கு இது தேவையா பாஸ்? | Sivakarthikeyan New Business

Aruvi Updated:
சிவகார்த்திகேயன் தொடங்கும் புதிய தொழில்?.. கடன் அவ்ளோ இருக்கு இது தேவையா பாஸ்? | Sivakarthikeyan New BusinessRepresentative Image.

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் புதியதாக திரையரங்குகள் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் தோன்றி தற்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.  கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கும் அவருக்கு சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. 

வரிசையாக இரண்டு படங்கள் 100 கோடி வசூலில் இணைந்ததால் அனூதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்தது. மேலும் அப்படம் பைலிங்குவலாக உருவானதால் தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வரலாம் என கணக்கு போட்டிருந்தார் சிவா. ஆனால் அவரது கணக்கை தவிடுபொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படத்தை ஒரு வாரத்திலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டார்கள்.

பிரின்ஸ் கொடுத்த அடிக்கு மருந்தாக மாவீரன் இருக்கும் என நம்பியிருக்கிறார் சிவகார்த்திகேயன். மண்டேலா படத்தின் மூலம் கவனம் ஈர்த்து தேசிய விருது வென்ற மடோன் அஷ்வின் படத்தை இயக்கியிருப்பதால் படம் ஹிட்டாகும் எஸ்கேவின் ரசிகர்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். முதலில் இந்தப் படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் ரிலீஸாகிறது. எனவே  ஜூலை 14ஆம் தேதி மாவீரன் ரிலீஸாகிறது.

மாவீரன் படத்தை முடித்துவிட்டு கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதற்காக சிவகார்த்திகேயன் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து வருவதாகவும், இந்தப் படம் அவரது கேரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்று பேச்சு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் புதிய தொழில் தொடங்கவிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. அதன்படி,  ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் இனைந்து (ஏசியன் சிவகார்த்திகேயன்)சினிமாஸ் என்று சென்னையில் திரையரங்கு தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கருதப்படுகிறது. இந்தத் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு இருக்கும் கடனில் இதெல்லாம் தேவையா என சிலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்