Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thendral Vanthu Ennai Thodum Today Episode: அபிக்கு கொடுத்த சத்தியத்தை மீறுவான வெற்றி...கல்யாணம் தடங்கல் இல்லாம நடக்குமா?

Priyanka Hochumin September 22, 2022 & 14:12 [IST]
Thendral Vanthu Ennai Thodum Today Episode: அபிக்கு கொடுத்த சத்தியத்தை மீறுவான வெற்றி...கல்யாணம் தடங்கல் இல்லாம நடக்குமா?Representative Image.

Thendral Vanthu Ennai Thodum Today Episode: அபி இப்படி தப்பான வழக்கில் மாட்டிக்கொண்டது மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானம் ஏற்படும் என்பதால் அபி வெற்றிக்கு திருமணம் ஏற்பாடு நடக்கிறது.

இந்த சந்தோஷமான விஷயத்த பூங்காவனத்திடம் சொல்ல வராங்க. அங்க எல்லாம் சந்தோசமா பேசிட்டு இருக்குறத பாத்துட்டு பவானிக்கு வயிறு வாயெல்லாம் பத்திகிட்டு எரியுது. அதுலயும் அபி அவ்ளோ பெருமையா பேசுறத பாத்த உடனே பவானி பிளான் பண்ணிட்டான். இந்த முறை டார்கெட் அபி! இது முடிஞ்சதுக்கு அப்புறம் கல்யாண பொண்ணு பையனுக்கு துணி எடுக்க கடைக்கு போறாங்க. அங்க வெற்றி அபியோட ரொமான்ஸ் ஒன்னும் தாங்கல. அந்த பக்கம் அபியோட பெரிமா இவங்க கல்யாண விஷயத்த வீட்ல இருக்குறவங்க கிட்ட ஓபன் செய்றாங்க. ஆனா அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்காம கோவ படுறாங்க.

அப்புறம் இவங்க கடைல இருந்து ஒரு பெரிய ஆர்டர ஒரு இடத்துக்கு டெலிவரி பண்ணனும்னு பேசிட்டு இருக்காங்க. ஆனா கல்யாண பொண்ணு வெளிய போகக்கூடாதுன்னு அபிக்கு பதிலா கலை எடுத்துட்டு போறான். அங்க பாத்தா பவானி அபிய அடிக்க ரவுடிங்கள செட் பண்ணி வச்சிருக்கான். இதுல வேற அபி அடிவாங்குறத கண்ணால பார்த்து ரசிக்கணும்னு வெயிட் பன்னிட்டு இருக்கான். ஆனா அந்த ரவுடிங்க கலைய போட்டு வெளுத்துட்டாங்க. அப்புறம் ஆள் மாறிப்போச்சுன்னு பதறி போய் அபேஸ் ஆகிட்டானுங்க. கொஞ்ச நேரத்துல வெற்றிக்கு வீட்ல இருந்து போன் வருது, கலைய அடிச்சுட்டாங்கன்னு. பதறி போய் வெற்றிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தா மூஞ்சு ஃபுல்லா வீக்கமா கலை உக்காந்துட்டு இருக்கிறான்.

உடனே என்ன நடந்தது என்று வெற்றி விசாரிக்கிறான். அபியோ இதுல நீ தலையிடாதான்னு வெற்றிய எச்சரிக்கிறாள். ஆனா வெற்றிக்கு கோவம் குறையல, கடைசில யாருன்னு கண்டுபிடிச்சு அவன பாக்க போறான். பூங்காவனம் வீட்டுக்கு போய் பவானி சட்டைய பிடிச்சு கேள்வி கேக்குறான். ஆனா பூங்காவனம் எப்படியோ சமாதானம் பண்ணி வெற்றிய அனுப்பி வைக்கிறான். அப்புறம் பவானி கிட்ட போய் என்ன நடந்ததுன்னு கேக்குறான். அவன் நான் எதும் பண்ணலைன்னு சொன்னதுக்கு, நீ என்கிட்ட மறைக்காத. வெற்றி கேட்கும் போது நீ பயந்தத நான் பாத்தேன். அவன் முன்னாடி கேட்க கூடாதுன்னு கேக்கல. நீ இதுக்கு மேல வெற்றிகிட்ட மோதாத அவன் சொன்னதை கண்டிப்பா செய்வான் துன்று சொல்லிட்டு போறான். கடுப்பான பவானி இருங்கடா உங்க ரெண்டு பேத்தையும் கவனிச்சிக்கிறேன் என்று டயலாக் விட்றான்.

அவ்ளோ தான் இனி அடுத்து என்ன நாடாகும் என்பதை தெரிந்துகொள்ள search around web இணையதளத்தை பின்பற்றி முன்பே தெரிந்துகொள்ளுங்கள்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்