இப்போ வீட்டில் இருப்பவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் சரி, எத மறப்பாங்களோ இல்லையோ.. 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ மறக்க மாட்டாங்க. நம்ம குடும்பத்துலயும் இது தான நடந்திருக்கு என்று சொல்லக் கூடிய அளவிற்கு இந்த நாடகத்தின் கதை இருக்கும். தினந்தினம், ஸ்வாரஸ்யமாகக் கொண்டு செல்லும் இந்த சீரியலில் இப்போ பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சரிங்க.. இன்னைக்கு அப்படி என்ன ஒரு பரபரப்புனு இந்தப் பதிவில் காணலாம்.
கதிர் வீட்டை விட்டு போன அப்றம், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துல ஒரு கிளையே இல்லாத போல ஆயிடுச்சி. இந்த சமயத்தில், வீட்டை விற்க முடிவெடுத்த அப்றம் நிறைய தடங்கல் வந்து, இப்போ வீட்டை கண்டிப்பா விற்க முடிவு பண்ணீட்டாங்க.
ஆனா, வீட்டை விற்றாலும் இன்னொரு புதிய வீடு கட்டுவதற்கு முன்னால், இவர்கள் அதே வீட்டிலேயே இருக்க மாதிரி யோசிக்கிறாங்க. ஆனா, எத்தனை பேர் வீடு வாங்க வந்தாலும், உடனே வீட்டை காலி பண்ணனும்னு சொல்றாங்க. இப்படி இருக்கும் போது, வீட்டை எப்படி விற்கறதுனு நினைக்கும் போது மீனாவோட அப்பா ஜனார்த்தனன் அவங்க வீட்டை வாங்கிக்கிறேனு சொல்றாரு.
ஆனா, மூர்த்திக்கு இதுக்கு சுத்தமா விருப்பம் இல்லை. இருந்தாலும், மீனா சொன்னதுனால, எல்லாரும் வீட்டை ஜனார்த்தனனுக்கு விற்க ஒத்துக்கிறாங்க. வீட்டை பதிவு செய்து குடுக்க எல்லோரும் ரெஜிஸ்டர் ஆபிஸுக்கு போறாங்க.
அங்க ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் ஒரு பேரதிர்ச்சி காத்துட்டு இருந்துது. அது என்னனா..? எல்லாருமே வீட்ட ஜனார்த்தனன் பேருக்கு தான் வாங்கறாருனு நினைச்சிட்டு இருக்கப்ப, திடீரென மீனாவ கையெழுத்து போட சொல்றாங்க. வீடு மீனா பேருக்குத் தான் எழுதி கொடுக்கப் போறீங்கனு, அங்க இருந்த ஆபிஸர் அவங்க எல்லார்ட்டையும் சொல்றாரு. இத கேட்டு அவங்க எல்லோரும் ஷாக் ஆகி நிற்கிறாங்க.. மீனாவோட பேர்ல வீட்டை பதிவு செய்ய எல்லோரும் சம்மதிப்பாங்களா..? இதற்கு மீனா என்ன முடிவெடுக்கப் போறாங்க…. இத எல்லாம் தெரிய searcharoundweb உடன் மறக்காமல் இணைந்திருங்க….
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…