தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நட்சத்திர கதாநாயகியாகத் திகழ்பவர் த்ரிஷா. இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார்.
குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் கொள்ளையடித்த இவர் அடுத்தடுத்து, புதிய தோற்றத்தில் நடித்த அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர உள்ளன. அந்த வகையில், சதுரங்க வேட்டை – 2 திரைப்படமானது நிறைவடைந்ததுடன், ரிலீஸூக்கு காத்திருக்கிறது. இத்துடன், ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்புடன் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படமும் வரும் 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இயக்குநர் சூர்யா வங்களா இயக்கத்தில் பிருந்தா என்ற வெப்சீரிஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அவினாஷ் கொல்லா மற்றும் ஆஷிஷ் கொல்லா இருவரும் சேர்ந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் த்ரிஷா போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக த்ரிஷா கூறியதாவது, வெப்சீரிஸின் முதல் சீசன் விரைவில் வெளிவர தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
த்ரிஷா நடித்த பிருந்தா நடித்த வெப்சீரிஸானது விரைவில் சோனி லைவ் தளத்தில் வெளியாக உள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிலையில் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றைச் செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் வீரமங்கையாக குந்தவை தோற்றத்தில் த்ரிஷாவைக் கண்ட ரசிகர்கள், அடுத்து வெப் சீரிஸில் போலீஸ் தோற்றத்தில் காண ஆவலுடன் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…