நடிகர் விஜய் ரசிகர்களை சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், பனையூரில் அவரது ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் தயாராகியுள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வரும் 2023 பொங்கலுக்கு திரைக்க வரவுள்ளது. இந்நிலையில், தமிழில் படம் வெளியாவதில் எந்தவித சிக்கலும் இல்லை என்றாலும், தெலுங்கில் படம் வெளியாவதில் கடும் சிக்கல் எழுந்துள்ளது.
பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது தான் இந்த சிக்கலுக்கு காரணம். என்ன தான் தெலுங்கு இயக்குனர் இந்த படத்தை இயக்கியிருந்தாலும், தெலுங்கு தயாரிப்பாளர் இதை தயாரித்திருந்தாலும், அடிப்படையில் இது தமிழ் படம் என்பதால், அதிக தியேட்டர் தர முடியாது என கைவிரிக்கப்பட்டுவிட்டது.
இதனால் வாரிசு படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், திடீரென சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் விஜய் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் நாமக்கல், சேலம் மற்றும் காஞ்சிபுரம் மூன்று மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும், இவர்களோடு கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதனால், பனையூரில் உள்ள விஜய் அலுவலகத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். விஜய் 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்திப்பதால் ரசிகர்கள் ஆவலோடு இருந்தாலும், படத்திற்கு சிக்கல் வரும்போது தான் ரசிகர்கள் ஞாபகம் வருகிறதா என்றும் சிலர் கேட்கத்தான் செய்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…