காந்தாரா 2 ஏற்கனவே வெளியாகிவிட்டது என குண்டைத் தூக்கி போட்டிருக்கிறார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும் சற்று சுதாரித்து கவனித்தால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
கன்னட மொழிப் படங்களை பெரும்பாலும் யாரும் பார்க்காத நிலையில், அனைவரது கவனத்தையும் தன் மீது திருப்பியவர் ரிஷப் ஷெட்டி. இவரின் மற்ற படங்களும் பாராட்டத்தக்கப் படங்கள்தான். எனினும் காந்தாரா அனைவரையும் கணெக்ட் செய்து மேஜிக்கை ஏற்படுத்தியது. நல்ல முறையில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதன் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய ரிஷப் காந்தாரா படத்தின் 2ம் பாகம் பற்றி பேசினார்.
காந்தாரா படத்தின் இரண்டாவது பாகம் ஏற்கனவே வெளியாகிவிட்டது எனவும், அதன் முன் கதையைத் தான் அடுத்த பாகத்தில் பார்க்க விருக்கிறோம் என்றும் கூறினார். இந்த பாகத்தில் தெய்வம் பற்றி மேலும் பல உண்மைகளை எடுத்து கூற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, காந்தாரா படம் வெற்றி பெற்ற நிலையில், மலையாளத்திலிருந்து ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என தகவல் வெளியானது. மோகன்லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடிக்க ரிஷப் ஷெட்டி அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் காந்தாரா படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகளில் மும்முரமாக இருப்பதாகவும் கூறி நிராகரித்துவிட்டார் எனவும் தகவல் வெளியானது.
கமல்ஹாசன், ரிஷப் ஷெட்டியைப் பாராட்டி வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனும் ரிஷப் ஷெட்டியும் இணைய வாய்ப்பிருக்கிறது என்றும் பேச்சு எழுந்தது. ஆனால் தனது அடுத்தடுத்த புராஜக்ட்கள் குறித்து ரிஷப் ஷெட்டி வேறு எதுவும் பேசவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…