2023ம் வருட மத்தியில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் துவங்கும் என இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் ஓகே சொல்லிவிட்டால் எந்த நேரத்திலும் ஸ்க்ரிப்ட் பணியைத் துவங்கவுள்ளதாகவும் தகவல்.
தமிழ் சினிமாவின் போலீஸ் படங்களில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள படம் கௌதம் மேனன் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம். இந்த படம் வெளியான சமயத்திலேயே மிகப் பெரிய ஃபேன்பாய் சம்பவம் இது என பலராலும் பாராட்டப்பட்டது. கமல்ஹாசனின் தரமான கமர்சியல் படங்களில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள படம் இது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானால் நன்றாக இருக்கும் என பல ரசிகர்களும் பேசி வருகின்றனர். இதுகுறித்து இயக்குநர் கௌதமிடம் கேட்கப்பட்டது.
வேட்டையாடு விளையாடு 2 ஸ்கிரிப்ட் ரெடி ஆய்க்கொண்டே இருக்கிறது. கமல் சார் கிட்ட லாக்டவுனுக்கு முன்பே 45 நிமிடங்கள் படம் குறித்து பேசியிருக்கிறேன். அதை டெவலப் பண்ண சொல்லிருக்கார். இப்ப கதை சொல்றதுக்காக ஒரு டைம் கொடுத்துருக்காங்க. முழு நீளமா ஒரு சரியான கதையை சொல்லிட முடியும்னு நம்பிக்கை இருக்கு. ரொம்ப ஆசையா இந்த படத்த அடுத்த வருசம் மத்தியி செய்யணும்னு நினச்சிட்ருக்குற படம் வேட்டையாடு விளையாடு 2 என அவர் தெரிவித்துள்ளார்.
ராகவன் மீண்டும் வரார். மீண்டும் ஏதோ கொலைக் குற்றத்தை கண்டுபிடிக்கும் டிடெக்டிவாக அதிரடி காட்ட வருகிறார். விரைவில் சாத்தியப்படும் இந்த படத்தினை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…