Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2020 இல் தொடர்ந்த அவதூறு வழக்கு.. வசமாக சிக்கிய விஜய் டிவி பிரபலம்.. தட்டித் தூக்கிய போலீஸ்!!

Sekar Updated:
2020 இல் தொடர்ந்த அவதூறு வழக்கு.. வசமாக சிக்கிய விஜய் டிவி பிரபலம்.. தட்டித் தூக்கிய போலீஸ்!!Representative Image.

2020 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றில் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் அப்போது ஹாட் டாப்பிக்காக மாறிய நிலையில், பல்வேறு பிரபலங்களும், இது குறித்து கருத்து தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் டிக்டாக் பிரபலம் சூர்யா தேவியும் வனிதா திருமணம் குறித்து வீடியோ வெளியிட்டு காரசாரமாக விளாசியிருந்தார். இந்த விவகாரத்தில் வனிதாவுக்கு ஆதரவாக நடிகர் நாஞ்சில் விஜயன், சூர்யா தேவியை விமர்சனம் செய்தார். 

இது குறித்து சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையே சண்டை கைகலப்பாக மாறியது. இதையடுத்து சூர்யா தேவி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதே நேரத்தில் நாஞ்சில் விஜயனும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில், வளசரவாக்கம் போலீஸ் தரப்பில், நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்துள்ளது. ஆனால் நாஞ்சில் விஜயன் வழக்கின் விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வளசரவாக்கம் போலீசார் நாஞ்சில் விஜயனை இன்று கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்