தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விக்ரம். தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களுக்காக மிக அதிக கடின உழைப்பை போட்டு அந்த படம் நன்றாக வருவதற்கு மிகவும் பாடுபடுபவர். கமல்ஹாசனுக்குப் பிறகு கலையின் மீது அதீக அக்கறை காட்டும் அதிக மெனக்கெடல் போடும் நடிகரும் இவர்தான். இவரின் நடிப்பில் கடைசியாக வந்துள்ள படம் கோப்ரா. இப்போதும் திரையரங்குகளில் ஓடி வருகிறது.
சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த திரைப்படம் மக்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றாலும் விமர்சகர்கள் இந்த படத்தை கழுவி ஊற்றிவிட்டனர். இந்த படம் குறித்த நெகடிவ் ரிவியூதான் எல்லா இடமும் பரவி இருக்கிறது. வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்திருந்தால் குறைந்த பட்சம் வசூலாவது நன்றாக இருந்திருக்கும். ஆனால் புதன்கிழமையே வெளியானதால் படத்தைப் பற்றிய நெகடிவ் ரிவீயூ மட்டுமே மக்களை எட்டியிருக்கிறது.
கெட்டப்புகள் இருந்தால் போதும் கதை தேவையில்லை என விக்ரம் நினைத்துவிட்டார் போல என பலரும் பேசி வருகின்றனர். இப்போது கோப்ரா திரைப்படம் வெளியாகி 1 வாரம் ஆகிவிட்டது. எனினும் உலகம் முழுக்க 50 கோடி வரைதான் வசூல் செய்துள்ளது திரைப்படம்.
கோப்ரா வெளியாகியுள்ள திரையரங்களில் காட்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு அந்த ஸ்லாட்டில் திருச்சிற்றம்பலம் படத்தையே திரையிடுகிறார்கள் என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது கோப்ரா படத்துக்கு போகிறவர்கள் அந்த நேரத்தில் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்துவிட்டு வீடு திரும்புகிறார்களாம்.
திருச்சிற்றம்பலம் படம் கடந்த வாரமே 100 கோடி வசூலை வாரிக்குவித்து, தனுஷின் வெற்றிப்படங்கள் வரிசையில் இடம்பிடித்துவிட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…