தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய வெற்றி என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம்தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்த படம் 100 நாட்களை நோக்கி இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15வது ஆண்டு விழாவில் கொண்டாடினர். அதில் உதயநிதி ஸ்டாலினும், கமல்ஹாசனும் மேடையேறி சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த விழாவில் கமல்ஹாசன் ஒரு உண்மைப் போட்டு உடைத்தார். அதாவது மன்மதன் அம்பு படத்தைத் தேர்ந்தெடுத்தது உதயநிதிதான். நான் விஸ்வரூபம் பண்ணலாம்னு போனப்ப காமெடி படம் வேணும்னு இவர்தான் கேட்டாரு என கூறினார் கமல்ஹாசன்.
முன்னதாக, தனது படங்களின் வெற்றியைக் கொண்டாடி குதூகலிப்பவர்கள், தயவு செய்து யாருடைய தோல்வியையும் பார்த்து சிரிக்காதீர்கள். அவர்களது தோல்வியால் நாளை நம் படத்துக்கே பாதிப்பு நிகழலாம் என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…