ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சிரியல் தான் “யாரடி நீ மோகினி”. அதில் வெண்ணிலா என்ற கேரக்டரில் தமிழ் மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் தான் நம்ம நட்சத்திரா. தற்போது சீரியலின் கதாநாயகியான இவருக்கும் விஷ்வா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுமண தம்பதிகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
நட்சத்திராவைத் தூக்கி வளர்த்த தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவருடைய ஒரே ஆசை நட்சத்திராவை மாலையும் கழுத்துமாக பார்க்க வேண்டும் என்பது தான். அதனால் தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குடும்பக் கோயிலில் வைத்து வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் மிக எளிமையாக முடிந்தாக கூறப்படுகிறது.
சென்ற வருடம் இந்த சீரியலின் மற்றொரு பிரபலமான சித்திரா ஷெட்டிக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:
Yaaradi nee mohini serial heroine marriage | Natchathira yaaradi nee mohini | Natchathira husband | Vennila yaaradi nee mohini
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…