டாக்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தில் சற்று அசந்ததன் காரணமாக படம் தோல்வியில் முடிவடைந்தது. ஆனாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தையே கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. இதே கதைதான் அண்ணாத்த படத்துக்கும். இந்நிலையில் விமர்சனத்தில் தோல்வி வசூலில் நிறைவு என கெத்து காட்டிய ரஜினிகாந்தும் நெல்சன் திலீப்குமாரும் இணைந்து புதிய படத்தில் பணிபுரியவுள்ளனர்.
நெல்சன் திலீப்குமாரின் அட்டகாசமான கதையில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு அவசர அவசரமாக ஜெயிலர் எனும் பெயரை வைத்து அறிவித்தனர். ஊரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் நம்ம யோகி பாபு நடிக்கிறாராம். நெல்சனுக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருப்பதால் மட்டுமல்ல, இந்த முறை ரஜினிகாந்தே யோகிபாபு படத்தில் இருக்கிறாரா என கேட்டுள்ளார் என கூறுகிறார்கள்.
அண்ணாத்த படத்தின் தோல்விக்கு காரணம் கதை என்றால் அதனை குழந்தைத் தனமான படம் எனக் கூறியதற்கு முக்கிய காரணமே சூரியின் காமெடி தான். ரஜினிக்கு கொஞ்சமும் செட் ஆகவில்லை. முன்னதாக யோகி பாபு தர்பார் படத்தில் ரஜினியும் சேர்ந்து நடித்திருப்பார். அது வேற லெவலுக்கு இருக்கும். இந்நிலையில் இம்முறையும் யோகி பாபு, ரஜினிகாந்த் காம்பினேசனில் படம் வருவது உறுதியாகியுள்ளது.
இந்த படத்தில் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…