Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

“போன மொற ஒருத்தர் இருந்தாரே”...  பழனிசாமியை பங்கம் செய்த அமைச்சர்!

KANIMOZHI Updated:
“போன மொற ஒருத்தர் இருந்தாரே”...  பழனிசாமியை பங்கம் செய்த அமைச்சர்!Representative Image.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் கூறுகையில், கடந்த ஆட்சி காலத்தில் முதலமைச்சர் ஆக இருந்த அவர் நானும் ஒரு விவசாயி தோழன் என்று சொல்லிக் கொண்டிருந்தார் பத்தாண்டு கால அதிமுக ஆட்சி காலத்தில் அவர்கள் வழங்கிய பயிர் கடன் ஆண்டு ஒன்றுக்கு 6000 கோடி சராசரியாக வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால்  திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் மட்டும் 10, 292  கோடி ரூபாய் விவசாயிகளுக்கான பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர் இந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி வரை 10 ஆயிரத்து 361 கோடி ரூபாய் தமிழக வரலாற்றில் இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்