பிரெஞ்சு விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள் கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் தரையிறக்கப்பட்டு எரிபொருள் நிரப்பி சென்றுள்ளது.
பிரான்சில் இருந்து தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சு ஆட்சிப்பகுதியான நியூ கலிடோனியாவை 72 மணி நேரத்தில் அடையும் வகையில் 3 ரபேல் போர் விமானங்களும், துணையாக ஒரு விமானமும் கிளம்பியது.
இந்நிலையில், 16, 600 கிலோமீட்டர் பயணத் தொலைவில் இடையே பிரெஞ்சு விமானங்கள் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியுள்ளது.
இதனையடுத்து, அந்த விமானப்படைத் தளத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு மறுநாள் அதிகாலையே புறப்பட்டுச் சென்றதாக டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…