Rain Update : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக 3 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பல பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னைவானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…