ரஷ்யாவில் 10 குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்களுக்கு 13 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவை விட 5 மடங்கு பெரிய நாடான ரஷ்யாவின் மக்கள் தொகை வெறும் 14 கோடியே 60 லட்சமாக உள்ளது. மேலும், கொரோனா மரணங்கள், உக்ரைன் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் போன்ற காரணங்களால் மக்கள் தொகை மேலும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக ரஷ்ய அரசு இந்த 13 லட்ச ரூபாய் பரிசுத்திட்டத்தை அறிவித்துள்ளது.
மேலும், 10-வதாக பிறக்கும் குழந்தைக்கு 1 வயது நிறைவடையும் போது இந்தப்பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் 10 குழந்தைகளும் உயிரோடிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…