இன்று இந்தோனேஷியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
உலகின் பல்வேறு பகுத்திகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். துருக்கியில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 50,000-க்கும் அதிகமாக மக்கள் இறந்துள்ளனர். வீட்டுகள், கட்டிடங்கள் இடிந்து நாடே மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. அதனை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் இன்று தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள இந்தோனேஷியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் டொபெலோ கடலுக்கு அடியில் 177 கிலோ மீட்டர் தூரத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என்ன தான் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் என்பது மிகவும் சாதாரமான விஷயம் தான் ஏனெனில் தீவில் இருக்கும் இந்த நாடுகளில் இது அடிக்கடி நடப்பது தான்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…