சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு சில்லரை வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக வாங்கி செல்கின்றனர். சென்னை மக்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்து வரும் கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை பன்மடங்கு உயர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை உயர்வின் எதிரொலியாகவும் காய்கறிகள் விலை உயர்ந்து காணப்பட்டது.
இதனையடுத்து, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…