தமிழகத்தில் வருடந்தோறும் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், மதுரை அருகே ஆடி வெள்ளியான நேற்று அம்மனுக்கு கூழ் காய்ச்சிய பக்தர் ஒருவர் கூழில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஆடி வெள்ளியை முன்னிட்டு அப்பகுதி அம்மனுக்கு கூழ் காய்ச்சியுள்ளார். இந்நிலையில், கூழ் காய்ச்சி கொண்டிருக்கும் போது அந்த பக்தர் தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, கொதிக்கும் கூழில் அவர் விழுந்த அவருக்கு உடனடியாக வலிப்பு வந்துள்ளார். இதனையடுத்து, கூழ் காய்ச்சிய அண்டாவில் தவறி விழுந்த அந்த பக்தர் உடல் முழுவதும் வெந்ததுள்ளது. இந்நிலையில், உடனடியாக இதனை பார்த்த இப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மருத்துவமனையில் அவர் சிகிச்சையின் பலனின்றி பரிதாமபாக உயிரிழந்துள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கூழ் காய்ச்சும் போது பக்தர் உயிரிழந்துள்ளதால் அம்மன் கோபத்தில் பலி வாங்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…