டெல்லியில் தான் பெற்ற 5 வயது மகளை கயிற்றால் கை, கால்களை கட்டி மொட்டை மாடியில் கொளுத்தும் வெயிலில் விட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் கராவல் துக்மீர்பூர் நகரில் வசித்து வருபவர் ராஜ்குமார் மற்றும் சப்னா. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் வீட்டு பாடம் செய்யவில்லை என்பதால் 1ஆம் வகுப்பு படிக்கும் 5 வயது மகளை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து மக்களின் கை கால்களை கயிற்றால் கட்டிவிட்டு மொட்டை மாடியில் தூக்கி கொண்டு போய் போட்டுள்ளார், நேரம் ஆக ஆக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது, இதனால் அந்த சிறுமி வெயில் தாங்காமல் கதறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு சிறுமியின் மாமா சுனில் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து குழந்தையை தூக்கியுள்ளனர்.
மேலும் இது குறித்து சிறுமியின் மாமா சுனில் கூறுகையில், சப்னா பொதுவாகவே மிகவும் கோவம் அதிகம் கொண்டவர், அடிக்கடி குழந்தைகளுக்கு இது போன்று எதாவது தண்டனை கொடுத்துக்கொண்டே இருப்பார், மகள் மட்டுமல்ல மகனையும் கண்மூடித்தனமாக அடிப்பார், நாங்கள் தடுக்க சென்றால் மேலும் அதிகமாக குழந்தைகளுக்கு அடி விழும் அதனாலே நாங்கள் சென்று தடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.
பின்னர் இது குறித்து சப்னாவின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் கூறுகையில், அவர்கள் வீட்டில் எப்போதும் ஓய்வில்லாமல் குழந்தைகளின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கும், கடும் வெயிலும் சரி கடும் குளிரும் சரி எதுவாயினும் ஆடைகளை கழற்றிவிட்டு குழந்தைகளை கைகால்களை கட்டி மொட்டை மாடியில் விட்டுவிடுவார் என கூறியுள்ளார். நாங்கள்தான் அவர்களுக்கு துணி கொடுப்போம், ஆனாலும் அவர் எங்களுடன் சண்டைக்கு வருவார் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்னா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…