India : நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்திக்கு சமீபத்தில் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் அந்த சம்மனுக்கு ராகுல்காந்தி ஆஜர் ஆனார்.
இந்நிலையில், சோனியா காந்தி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை.
இதனையடுத்து, சோனியா காந்தி தற்போது கொரோனாவிலிருந்து குணமடந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் சோனியாகாந்தி வரும் 21ஆம் தேதி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், வரும் 21ஆம் தேதி இந்த சம்மனுக்கு சோனியாகாந்தி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…