Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கேரளாவிற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை.. முன்னெச்சரிக்கை தீவிரம்..

Muthu Kumar August 04, 2022 & 11:30 [IST]
கேரளாவிற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை.. முன்னெச்சரிக்கை தீவிரம்..Representative Image.

கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது.

அதன்ப்ழி, இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் அணைக்கு நீல நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கேரளாவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், மலையோர மாவட்டங்களில்  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. இதையடுத்து இந்த பகுதிகளில் வசித்தவர்களை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்