தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக்கடலில் கூறிவந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் நாட்டில் பல மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது.
குறிப்பாக தெலங்கானா மாநிலத்தில் ஜெயசங்கர் பூபல்பள்ளி, நிசாம்பாத், ராஜண்ணா சிர்கிலா மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிருத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் மழை, வெள்ளம் நிலவரம் குறித்து முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்திற்குப் பின்னர் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தெலங்கானாவில் இன்றும் நாளையும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதால் அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.,
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…