இந்திய முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாகும். அந்த வகையில் இளநிலை மருத்துவ படிப்பில் சேர வரும் ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு மையங்கள் ஒதுக்கீடு குறித்து அறிவிப்புச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
எந்தெந்த நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்களான செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் இவைகளை தேர்வு எழுத வருபவர்கள் கொடுவரக்கூடாது.மீறுபவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீட் தேர்வானது பிற்பகல் 2 மணி முதல் 5:20 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மைய வளாகத்திற்குள் பிற்பகல் 1.30 மணிக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆண்டு நீட்த் தேர்வு ஹிந்தி , தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ள நீட்தேர்விற்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…