மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘டிரான்ஸ்’ என்ற திரைப்படம் தமிழ் டப்பிங்கில் நிலை மறந்தவன் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் மதத்தை வைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி பிழைக்கும் பாதிரியார்களின் பின்னணி குறித்த கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இய்த்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை வெளியிடக் கூடாது என ஒரு சில பகுதிகளில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுகுறித்து எச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, “நிலை மறந்தவன்என்ற பெயரில் திரையிடப்பட்டுள்ள படத்தை திரையிடுவதற்கு திரையரங்கிற்கு மிரட்டல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்றும், இது மிகவும் கண்டனத்துக்குரியது என்றும் அதுவும் மிரட்டல் செய்வது உளவுத்துறை அதிகாரி என்று கூறப்படுவதால் சினிமாவை நிறுத்துவதுதான் உளவுத்துறை வேலையா?” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…