Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மலை...மக்களே உஷார்..!

madhankumar July 17, 2022 & 17:44 [IST]
5 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மலை...மக்களே உஷார்..!Representative Image.

தமிழகத்தில்  கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது . இந்த மழை மேலும் நீடிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்.  

இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் , தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். 19, 20ம் தேதிகளில் தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்து வருகிறது. 

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும். இன்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டி தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்