தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் இலேசான மழையும், பல மாவட்டங்களில் கடுமையான வெப்பமும் நிலவிவருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, மதுரையில் அதிக அளவாக 39 டிகிரியும், கரூர் மாவட்டம் பரமத்தி, நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடியில் 38 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்திற்கு வீசும் மேற்குத் திசை காற்றின் வேகமாறுபாட்டால், இன்று முதல் 30ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நாட்களில் வங்ககக்கடலின் மேற்கு மத்தியப் பகுதி, வடமேற்கு, தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார்வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் சூறாவளிக் காற்று வீசும் என்றும், மீனவர்கள் இன்றும் நாளையும் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…