தன்னுடைய குடும்பமே ஒரு ஊருக்குச் சமம் என்று வாழ்ந்து வந்த தாத்தா இனி எனக்கு குழந்தைகள் வேண்டாம் என்று தடாலடியாக முடிவெடுத்துள்ளார்.
கிழக்கு உகாண்டா பகுதியில் புடலேஜா மாவட்டத்தில் உள்ள புகிசா கிராமத்தில் வசித்து வருகிறார் 68 வயதான மூசா ஹசஹ்யா கசேரா. இவருக்கு 12 மனைவிகள், 102 குழந்தைகள் மற்றும் 578 பேரக்குழந்தைகள் உள்ளனராம். கேட்ட உடனே குப்பென்று வேற்கிறது அல்லவா. இன்னும் பல வியக்கத்தக்க விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். இவரை சில வாரங்களுக்கு முன்னர் ஆங்கில பத்திரையாளர்கள் பேட்டியெடுத்துள்ளனர்.
அதில் அவர் கூறிய தகவல் என்னவென்றால், மூசாவிற்கு பெரிய குடும்பம் என்றால் மிகவும் பிடிக்குமாம். தான் இளம் வயதில் இருக்கும் போது திருமணம், குழந்தைகள் போன்ற எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தாராம். இவரின் பெற்றோர்கள் 1972 ஆம் ஆண்டு எனக்கு திருமணத்திற்காக பெண் பார்க்கத் தொடங்கினர். அப்போது 17 வயதான பெண்ணை முதல் முதலாக திருமணம் செய்துக் கொண்டேன். எங்களுக்கு சில குழந்தைகளும் பிறந்தன. இருப்பினும் குடும்பம் சிறியதாக இருப்பது போல தோன்றியது.
எனவே, அடுத்தடுத்து மொத்தம் 12 மனைவிகளை திருமணம் செய்துக் கொண்டேன். நான் இளமையாக இருந்ததால் நல்ல வருமானம் வந்தது. மேலும் எனக்கு 102 குழந்தைகள் பிறந்தன. ஆனால் எனக்கு இப்போது போதிய வருமானம் இல்லை. மொத்த குடும்பமும் இரண்டு வேலை உணவு மட்டும் சாப்பிடுகிறோம். பிழைகளையும் சரியாக படிக்க வைக்க முடியவில்லை. ஆகையால் எங்கள் குடும்பம் வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டோம். இதனை பேர் இருப்பதால் சண்டை, சச்சரவுகள் வருவது வழக்கம். எனவே, வாரத்திற்கு ஒருமுறை மட்டும் ஒன்றாக கூடி இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வோம்.
எனக்கு இப்போது 68 வயது ஆகிறது, என்னால் என்னுடைய குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, முதல் மற்றும் கடைசி பிள்ளை மற்றும் பேரப்பிள்ளைகளை மட்டும் நினைவில் வைத்துக் கொள்கிறேன். இனிமேல் எனக்கு பிள்ளைகள் வேண்டாம் என்று தீர்மானம் செய்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…