சிறுவர்கள், ஹாலிவுட், தென் கொரியாவின் படங்களைப் பார்த்தால் இனி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என வெளிவந்துள்ள தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவில், அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தென்கொரியா மர்றும் மேற்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்களைக் கடுமையாக தவிர்க்கும் ஆட்சியராக இவர் உள்ளார். வட கொரியாவில் மக்கள் ஆட்சியாக இல்லாமல், இவரின் குடும்ப ஆட்சியாகத் தான் நடைபெறுகிறது. வட கொரிய மக்களும் இந்த ஆட்சியையே பின்பற்ற வேண்டும் என சட்டங்களைக் கொண்டு வருகிறார்.
அதிலும் முக்கியமாக, மற்ற நாட்டு கலாச்சாரங்கள், வட கொரியா நாட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார். அதில் ஒன்றாக முன்னரே தென் கொரியா படங்களை அந்நாட்டு மக்கள் பார்க்கக் கூடாது என சட்டம் விதித்திருந்தார். தற்போது, அந்நாட்டு சிறுவர்கள் ஹாலிவுட், தென் கொரியா படங்களைப் பார்க்கக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறினால், சிறுவர்களுக்கு ஐந்து ஆண்டுகால சிறை தண்டனை மற்றும் பெற்றோர்களும் 6 மாதக் கால தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் கூறியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…