இன்று தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின, அதில் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.27% அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்திருப்பதாகவும் அதே நேரத்தில் ,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில்,11 ஆம் வகுப்பு துணைத்தேர்வை எழுதும் மாணவர்கள் வரும் ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி,https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு முடிவுகள் கடந்த 20 ஆம் தேதி ஒன்றாக வெளியானது, இதில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 10,12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 4 வரை விண்ணப்பிக்கலாம் எனவும்,12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் – ஆகஸ்ட் 1 வரை நடைபெறும். 10ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…