தமிழகத்தில் பெரும்பாலும் குறிப்பிட்ட நகரங்களை தவிர மற்ற நகரங்களில் இரவு நேரம் செயல்படும் உணவகங்களை மூட காவலர்கள் வற்புறுத்தும் சம்பவங்கள் அங்கங்கே நடந்துவந்தது. பல கடைகளில் காவலர்கள் அத்துமீறிய சம்பவங்களும் நடந்தேறின.
இந்நிலையில் இரவு நேரங்களில் இயங்கும் வணிகவளாகம், உணவகம் ஆகியவற்றை மூட போலீஸ் வற்புறுத்தக்கூடாது என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 10-க்கு மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட கடைகள் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்கலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஆணைய பின்பற்ற காவல் ஆணையர்கள் எஸ்.பி.க்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…